Jaipur:
பாஜகவிலிருந்து வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ராஜஸ்தான் மாநில அமைச்சரின் பெயர் இடம்பெறாததால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மக்கள் நலன் மற்றும் நிலத்தடி நீர் அமைச்சரான சுரேந்திர கோயல் பதவி ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் வசுந்தர ராஜீ மற்றும் அம்மாநில கட்சி தலைவர் மதன் லால் சாயினியிடம் தனித்தனியாக ஒப்படைத்தார்.
ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினரான சுரேந்திர கோயல் தனது ராஜினாமா குறித்து காரணத்தை வெளியிடவில்லை. ஞாயிறன்று பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்கள் இடம் பெற்றிருந்தன.
COMMENTS
Advertisement