Read in English
This Article is From Dec 21, 2018

பயணிக்கு நெஞ்சு வலி - சென்னையில் அவசரமாக தரையிறங்கிய துபாய் விமானம்

நெஞ்சு வலி ஏற்பட்ட 48 வயது பயணி ஒருவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisement
இந்தியா

பயணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது.

Chennai:

பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் துபாயில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் ஒன்று சென்னையில் அவரசமாக தரையிறக்கப்பட்டது.

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து விமானத்தில் இருந்த அதிகாரிகள் சென்னை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தரையிறங்க திட்டமிடப்படாத அந்த விமானத்திற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் நேரம் ஒதுக்கித் தந்தனர். இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டு அதில் இருந்த உடல் நிலை பாதிக்கப்பட்ட 48 வயது பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்பின்னர் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. அதிகாலை நேரத்தில் விமானம் தரையிறங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பயணியை எமர்ஜென்ஸி மருத்துவ குழுவினர் முதல் உதவி அளித்தனர். அதன்பின்னர் அவர் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Advertisement
Advertisement