நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய பெண், சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ‘சென்னை கன்வென்ஷன் மையத்தில்’ மர்மமான முறையில் இறந்துள்ளார்.
லிண்டா ஐரீன் என்ற அந்தப் பெண், சில நாட்களுக்கு முன்னர் மையத்துக்கு வந்துள்ளார். அவர் நேற்றுடன் அறையை காலி செய்துவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. மேலும், மையத்திலிருந்து அவருக்கு விடுக்கப்பட்ட போன் அழைப்புகளையும் லிண்டா எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மையத்தின் ஊழியர்கள், அவர் தங்கியிருந்த அறைக்கான நகல் சாவியை வைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் லிண்டா, மர்மமான முறையில் இறந்துள்ளது தெரிந்திருக்கிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில், ‘விசாரணை நடந்து வருகிறது. இதற்கு மேல் எந்தத் தகவலும் சொல்வதற்கில்லை’ என்றுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)