This Article is From May 08, 2019

பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 8 பேர் பலி!!

Blast in Lahore: குண்டுவெடிப்பு சம்பவம் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி அருகே நடந்துள்ளது. தெற்காசியாவின் பிரமாண்ட மசூதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 8 பேர் பலி!!

Lahore Blast Today: பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

Lahore:

பாகிஸ்தானின் பழமை வாய்ந்த மசூதி ஒன்றின் அருகே இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ரமலான் மாதத்தில் இவ்வாறான சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குண்டுவெடிப்பு சம்பவம் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி அருகே நடந்துள்ளது. தெற்காசியாவின் பிரமாண்ட மசூதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 

பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், அந்நாட்டில் மசூதி அருகே நடந்திருக்கும் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

.