This Article is From May 24, 2019

நாட்டை துண்டாட நினைப்பவர்களை மக்கள் நம்பமாட்டார்கள் - கன்னையா குமாரை சாடிய ரவிகிஷான்

தேச விரோதிகள் அரசாங்கத்தை தவறாக பேசி ஒருபோதும் வெல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

நாட்டை துண்டாட நினைப்பவர்களை மக்கள் நம்பமாட்டார்கள் - கன்னையா குமாரை சாடிய ரவிகிஷான்

கன்னையா குமார் பீகாரில் போட்டியிட்டார்.

Gorakhpur:

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் தலைவரான கன்னையா குமார் பீகார் மாநிலத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதற்கு ரவி கிஷான் ‘நாட்டை  துண்டாட நினைப்பவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் என்று சாடியுள்ளார். 

மக்கள் தேசத்துக்கு எதிராக பேசும் யாரையும் நம்பமாட்டார்கள். தேச விரோதிகள் அரசாங்கத்தை தவறாக பேசி ஒருபோதும் வெல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

கன்னையா குமார்2.7 லட்சம் வாக்குகள் பெற்றார். எதிராக போட்டியிட்ட கிரிராஜ் சிங் 6.92 லட்சம் வாக்குகளை  பெற்றார். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜான்பூர் மக்களவை தொகுதில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். நடிகர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாஜகவுடன் இணைந்தார். 

.