This Article is From May 23, 2019

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர்…!

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துச் செய்தியில் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Written by

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று வாக்கு என்னிக்கை நடந்து வருகிறது. பரபரப்பாக நடந்துவரும் வாக்கு என்னிக்கையில் இந்தியா முழுவதும் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க கட்சி 350 இடங்களில் முன்னிலைப்பெற்று இருக்கிறது. காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்ற கட்சிகள் 103 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் பா.ஜ.க பெரும்பாண்மையன இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன்,இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துச் செய்தியில் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement