This Article is From Aug 31, 2018

கோவையில் யானை மிதித்து பழங்குடியின நபர் பலி!

கோயம்புத்தூர் மாவட்ட செம்புக்கரையைச் சேர்ந்த முருகேசனை காட்டு யானை மிதித்து சாகடித்துள்ளது

கோவையில் யானை மிதித்து பழங்குடியின நபர் பலி!

கோயம்புத்தூர் மாவட்ட செம்புக்கரையைச் சேர்ந்தவர் முருகேசன். பழங்குடியினத்தைச் சேர்ந்த அவருக்கு வயது 40. அவரை, நேற்று ஒரு காட்டு யானை மிதித்து சாகடித்துள்ளது.

இது குறித்து கோயம்புத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு காவல் துறையினருடன் வனத் துறை அதிகாரிகள் விரைந்தனர். சம்பவ இடத்தில் முருகேசன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது வனத் துறை.

யானை மிதித்து உள்ளூர் நபர் ஒருவர் இறந்துள்ளது செம்புக்கரை மக்களை பீதியடையச் செய்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.