বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 23, 2019

ஜம்மு & காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

Advertisement
இந்தியா Edited by
Srinagar:

காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள தரம்தோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

உயிரிழந்த பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

Advertisement
Advertisement