Srinagar:
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக இன்று நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார். வீரர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் அச்சாபால் என்ற இடத்தில் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் இன்று காலை அச்சாபாலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே என்கவுன்ட்டர் நடந்தது. இதில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார்.
தீவிரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Advertisement
COMMENTS
Advertisement