বাংলায় পড়ুন தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 17, 2019

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: ராணுவ மேஜர் உயிரிழப்பு! 3 வீரர்கள் காயம்!!

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அச்சாபால் என்ற இடத்தில் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

காயம் அடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Highlights

  • அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபாலில் என்கவுன்ட்டர் நடந்துள்ளது
  • ராணுவ மேஜர் ஒருவர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார்
  • தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
Srinagar:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக இன்று நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார். வீரர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் அச்சாபால் என்ற இடத்தில் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு படையினர் இன்று காலை அச்சாபாலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே என்கவுன்ட்டர் நடந்தது. இதில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார்.

தீவிரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 
 

Advertisement
Advertisement