This Article is From Jun 08, 2020

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள பிஞ்சோரா பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Srinagar:

ஜம்மு- காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக போலீசார் ஒருவர் கூறும்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள பிஞ்சோரா பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். 

இந்த தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கினர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில், பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் என்வுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

இதனிடையே, இளைஞர்கள் பயங்கரவாத அணிகளில் சேருவதைத் தடுக்கும் பொருட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கொள்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளத்தையும், அவர்களது குழு பற்றி தகவல்களையும் போலீசார் தெரிவிக்கவில்லை. 

தொடர்ந்து, சோபியான் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் சம்பவம் ஆகும். 

.