This Article is From Mar 10, 2020

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்!! 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ரிபான் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டது.

Advertisement
இந்தியா

தெற்கு காஷ்மீரின் ரிபான் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

Highlights

  • தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல்
  • மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவம் மீது துப்பாக்கிச்சூடு
  • 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல்
Srinagar:

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ரிபான் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டது. 

இதையடுத்து மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். இதன்பின்னர் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.

இதில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவரவில்லை.

Advertisement

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை தூண்டி விட்டு பாகிஸ்தான் மறைமுக போரை நடத்தி வருகிறது. இதனை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பின் மூலம் முறியடித்து வருகின்றனர். 

Advertisement