हिंदी में पढ़ें Read in English
This Article is From May 16, 2019

புல்வாமாவில் துப்பாக்கி சூடு : இரண்டு தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு

Pulwama encounter:இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவரும் காயமடைந்துள்ளனர். இரண்டு பயங்கரவாதிகள் ஒரு வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Translated By

பயங்கரவாதிகள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தியபோது துப்பாக்கி சூடு நடந்ததாக தெரிவிக்கிறது.

Srinagar:

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த என்கவுண்டரில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் மற்றும் சிறப்பு நடவடிக்கை குழு ஆகியவற்றின் படைவீரர்கள் பயங்கரவாதிகள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தியபோது துப்பாக்கி சூடு நடந்ததாக தெரிவிக்கிறது.

இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவரும் காயமடைந்துள்ளனர். இரண்டு பயங்கரவாதிகள் ஒரு வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலதிக தகவல்கள் விரைவில்
 

Advertisement
Advertisement