Srinagar:
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னேர் என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.
அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் தீவிவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்படவில்லை.
Advertisement
COMMENTS
Advertisement