বাংলায় পড়ুন Read in English
This Article is From May 28, 2020

'சீனாவுடனான எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்க்க நடவடிக்கை' - ட்ரம்புக்கு மத்திய அரசு பதில்

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் பெரும் ராணுவ கட்டமைப்பை அமைத்து வருகின்றன.

Advertisement
இந்தியா

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை தீர்க்க உதவத் தயார் என்று அமெரிக்கா கூறியிருந்தது.

Highlights

  • இந்தியா - சீனா இடையே கடந்த சில நாட்களாக எல்லை பிரச்னை மீண்டும் வெடிப்பு
  • இரு நாடுகளுக்கும் உதவத் தயார் என்று அமெரிக்கா கூறியிருந்தது
  • பிரச்னையை சுமுகமாக தீர்க்க நடவடிக்கை எடுத்துவருவதாக இந்தியா பதில்
New Delhi:

சீனாவுடனான எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை வெடித்துள்ள நிலையில், அதனை நடுவராகவோ அல்லது தூதராகவோ இருந்து தீர்த்து வைக்க உதவுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்புடைய கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது-

தூதகர ரீதியில் இந்தியா - சீனா இடையிலான பிரச்னைகள் பேசப்பட்டு வருகிறது. எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன. இதுதொடர்பாக பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம். 

Advertisement

எல்லையில் நமது படைகள் சிறப்பாக செயல்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றன. இந்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியா தனது எல்லையையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்காது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் பெரும் ராணுவ கட்டமைப்பை அமைத்து வருகின்றன. பதட்டத்தை அதிகரிப்பதும், இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நிலைகளை பலப்படுத்துவதும் என ஒரு தெளிவான சமிக்ஞையில், அவர்கள் இரண்டு வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர். 

ஏறக்குறைய 3,500 கி.மீ நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை எல்லையாகும்.

Advertisement

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் ராணுவ மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உருவானது குறித்து வார்த்தைப் போர் நடத்தி வருகின்றன. 

கடந்த மே.22 ஆம் தேதியன்று, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் இரண்டாவது நாடாக சீனா தனது பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டை 6.6 சதவீதம் அதிகரித்து, 179 பில்லியன் டாலராக உயர்த்தியது. இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். 

Advertisement

இந்த விவகாரங்களின் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 'இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது. இதுபற்றி இரு நாடுகளிடமும் நாங்கள் தெரிவித்து விட்டோம். நடுவராகவோ அல்லது தூதராகவே இருந்து எல்லைப் பிரச்னையை தீர்க்கத் தயார்.'  என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் ட்ரம்பின் கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 

Advertisement