ஒரு சாதாரண மூதாட்டி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் அவரின் ஆங்கில உச்சரிப்பைப் பார்த்து ‘வாவ்' போட்டு வருகின்றனர். அந்த மூதாட்டி, வீடியோவில் மகாத்மா காந்தி பற்றிப் பேசுகிறார். படபடவென ஆங்கிலத்தில் பேசினாலும், ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு தெளிவு இருக்கிறது. பலரும் அவரைப் பாராட்டி, வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி, அருண் போத்ரா, இது குறித்தன வீடியோவைப் பகிர்ந்துள்ளார். காணொளியில் பக்வாணி தேவி என்கிற வயதான பெண்தான் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குகிறார். ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவைச் சேர்ந்தவர் பக்வாணி தேவி என்பது தெரிகிறது.
வீடியோவில் தேவி, “மகாத்மா காந்தி, இந்த உலகின் மாபெரும் மனிதர்களில் ஒருவர். பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் சாதாரணமான மனிதராக வாழ்ந்தவர்.
தேசத்தின் பிதாவான அவர், அகிம்சையைப் போற்றினார்,” என்று சொல்லி முடித்து தனது பெயரையும் பதிவு செய்தார்.
வீடியோவைப் பகிர்ந்திருந்த போத்ரா, “இந்தப் பெண்ணின் ஆங்கிலப் பேச்சுக்கு, 10-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள்?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார். வைரல்
வீடியோவைக் காண்க:
போத்ராவால், ட்விட்டர் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, 3 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் மூதாட்டிக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள்.