This Article is From Oct 23, 2018

சுனாமியே வந்தாலும் எங்களை பிரிக்க முடியாது: ஓ.பி.எஸ்

எதிர்கட்சிகள் தனக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த சதி செய்கின்றனர்

சுனாமியே வந்தாலும் எங்களை பிரிக்க முடியாது: ஓ.பி.எஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

Pudukottai, Tamil Nadu:

சுனாமியே வந்தாலும் தன்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

நானும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் நடத்தி கொண்டு இருக்கிறோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விட்டு சென்ற நலத்திட்டங்களையும் மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

எதிர்கட்சிகள் எனக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த சதி செய்கின்றனர். சுனாமியே வந்தாலும், எங்களிடையே எந்தவித பிரச்சினையையும் யாரும், உருவாக்கிட முடியாது. எங்களை ஆட்டவோ? அசைக்கவோ? உள்ளேயும், வெளியேயும் யாரேனும் முயற்சி செய்தால், அது நடக்காது என அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் சதியால் அதிமுகவை அசைக்க முடியாது என்றும், மக்கள் ஆதரவோடு எதிர்கட்சியின் சதித்திட்டங்ளை முறியடிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

.