Ranchi:
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யவே முடியாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யவே முடியாது. அதனை எந்தவொரு கட்சிக்கும் சாதகமாக பயன்படுத்த முடியாது.
இந்த பிரச்னை குறித்து கூட்டம் நடத்தினோம். அதில் எந்தக் கட்சிகளும் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.
COMMENTS
Advertisement