Poll of Exit Poll 2019: பாஜகவே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்.. LIVEUPDATES
Poll of Exit Poll 2019, Indian General Election: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு: 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை தொடர்ந்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மெகா கூட்டணி அமைக்கும் காங்கிரஸ், மற்றும் அதிகளவிலான மாநிலக் கட்சிகள் ஆகியவற்றை பாஜக எதிர்கொள்கிறது.
2019 Poll of Exit Poll India: 7கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
New Delhi:
நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த மாதம் முதல் நடந்த வந்த மக்களவை தேர்தல், இறுதி கட்டத்தை எட்டியது. இன்று நடந்த 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
கடந்த ஏப்.11ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், 6 கட்டமாக இதுவரை 483 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது. பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 உள்ளிட்ட தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த 59 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் இறுதிக்கட்டத் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு அப்டேட்ஸ்