Read in English
This Article is From Jul 26, 2019

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7-வரை நீட்டிப்பு! மத்திய அரசு தகவல்!!

நாடாளுமன்ற விவகாரத்திற்கான அமைச்சரவைக்குழு நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

New Delhi:

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆகஸ்ட் 7-ம்தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இந்த தகவலை மக்களவை சபாநாயர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்தார்.

இரு அவைகளையும் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவு செய்வதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியிருந்தது. இதில் நீட்டிப்பு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், எதிர்க்கட்சிகள்தான் எப்போதும் அவையை நீட்டிக்க வேண்டும் என்று கூறி வருகின்றன. இதனை நாங்கள் செய்துள்ளோம் என்றார்.

Advertisement

நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜூன் 17-ம்தேதி தொடங்கி இம்மாத 26-ம்தேதி அதாவது நாளையுடன் முடிவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது அடுத்த மாதம் 7-ம்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Advertisement