বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 06, 2019

சுகோய்-30 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை! - பாகிஸ்தான் பொய் தகவல்!

பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தியதா என்பதை கண்டறிய, அனைத்து சுகோய்-30 போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என பாதுக்காப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா

சுகோய்-30 மேம்படுத்தப்பட்ட அதிநவீன போர் விமானம் ஆகும்.

New Delhi:

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுட்டு வீழத்தப்பட்டதாக கூறப்படுவது பொய் தகவல் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. அதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுக்க முயன்றது. இதற்காக எஃப்-16 ரக போர் விமானத்தை பயன்படுத்தி இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசியது. 

அந்த விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் ஒரு பாகத்தையும் கைப்பற்றியது. அப்போது, பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டிச் சென்ற இந்தியாவின் சுகோய்-30 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் கூறி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் சுகோய் 30 விமானத்தை சுடவில்லை என இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி பாகிஸ்தானின் பால்கோட்டில் தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய போர் விமானங்கள் அனைத்தும் பத்திரமாக திரும்பி வந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இந்தியாவை நோக்கி செலுத்திய எப்.16 போர் விமானத்தை இழந்து விட்ட பாகிஸ்தான், தனது தோல்வியை மறைக்கவே பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் இந்திய விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவ தரைப்படைகளைத் தாக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் விமானப் படை விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய போது, சுகோய், மிராஜ், பைசன் ஆகிய இந்திய விமானப்படை விமானங்கள் அவற்றை விரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்-16 போர் விமானத்திலிருந்து வீசப்பட்ட ஏவுகணையை சுகோய் விமானம் தடுத்தது. அப்போது, சுகோய் விமானத்திற்கு லேசான சேதாரம் ஏற்பட்டதாகவும், இதில் சில பாகங்கள் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

மேலும் படிக்க - "பாக். மீண்டும் தாக்கினால் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது இந்தியா"

Advertisement