This Article is From Apr 30, 2019

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற ஃபனி புயல்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி புயல் அதி தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

இன்று காலை நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ தொலைவில் ஃபனி புயல் மையம் கொண்டுள்ளது. 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறி நாளை மாலை வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்பகுதிக்கு ஃபனி புயல் நெருங்கும் என இந்திய வானிலை மையம் மையம் கூறியுள்ளது.

ஃபனி புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என்பதால், வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று 60 முதல் 70 கிலோ மீட்டர் வரையிலுமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

ஃபனி புயல், மே ஒன்றாம் தேதிக்குப் பிறகு, ஒடிசா கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Advertisement