அமெரிக்கா வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பில், தீயணைப்பு எச்சரிக்கை அலாரம் அடித்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த மக்கள், தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தீயணைப்பு அலாரத்தை எலி இழுத்திருப்பது சிசிடிவி-யின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அதனால், மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் எனவும், தீ பாதிப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு அலாரத்தை எலி அழுத்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவத்தால் வாஷிங்டனில் உள்ள குடியிருப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
COMMENTS
Advertisement