Indore:
மத்திய பிரதேசத்தின் இந்தூரின் விஜய் நகர் பகுதியில் உள்ள கோல்டன் ஹோட்டலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க போராடி வருகின்றன. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் எத்தனைபேர் உள்ளே இருந்தனர் என்பது தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை.
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ பகிர்ந்த படங்களில் ஹோட்டலின் முன்புறம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. ஹோட்டலின் கதவுகள் முழுவதும் தீக்கிரையாகி இருப்பதையும் பார்க்க முடிகிறது. நெரிசலான சாலையில் தீயணைப்பு வாகனங்கள் நிற்பதை பார்க்கலாம்.
இதே நேரத்தில் மகாராஷ்டிராவின் பிவாண்டியில் உள்ள கிடங்கிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன.
Advertisement
COMMENTS
Advertisement