Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 05, 2018

கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து!

கட்டடத்தின் சர்வர் அறையிலிருந்து தீ பரவி இருக்கக்கூடும் என்று தீயணைப்பு வீரர்கள் யூகித்து தகவல் கூறியுள்ளனர்

Advertisement
நகரங்கள்

Highlights

  • பார்க் தெருவில் இருக்கும் 8 மாடி கட்டடத்தில் தீ விபத்து
  • கட்டடத்திலிருந்த அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல்
  • 10 தீயணைப்பு வண்டிகள், தீயை அணைக்க முயற்சி
Kolkata:

கொல்கத்தாவில் இருக்கும் பார்க் தெருவில் உள்ள அபிஜே ஹவுஸ் அடுக்குமாடி கட்டடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயை அணைக்க 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், தீ பிடித்து எரியும் அபிஜே ஹவுஸ் கட்டடத்தைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திலிருந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டடத்தின் சர்வர் அறையிலிருந்து தீ பரவி இருக்கக்கூடும் என்று தீயணைப்பு வீரர்கள் யூகித்து தகவல் கூறியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இன்று காலை 11 மணி அளவில் தீ விபத்து குறித்தான முதல் தகவல் வந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, பார்க் தெருவுக்கு வரும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பார்க் தெருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக கூறப்படுகிறது. 

Advertisement