This Article is From Jun 13, 2018

தீபிகா படுகோன் வசித்து வரும் மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வசித்து வரும் மும்பையில் இருக்கும் அடுக்கு மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

தீபிகா படுகோன் வசித்து வரும் மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து!

மும்பை ஒர்லியில் இருக்கும் 34 மாடி கட்டடம்

ஹைலைட்ஸ்

  • மும்பையின் ஒர்லி பகுதியில் இருக்கும் கட்டடத்தில்தான் தீ விபத்து ஏற்பட்டது
  • 33-வது மாடியில்தான் தீ பற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது
  • தீ விபத்துக்கான காரணம் பற்றி தெரியவில்லை
Mumbai:

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வசித்து வரும் மும்பையில் இருக்கும் அடுக்கு மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையின் ஒர்லி பகுதியில் இருக்கும் 34 மாடிகள் கொண்ட பியூமாண்டே டவர் கட்டடத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் உச்சியில் இருக்கும் 33 ஆம் மாடியில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், உச்சியில் இருக்கும் சில மாடிகளில் இந்த தீ பரவியுள்ளது. இதனால், அங்கிருந்து கரும் புகை வந்த வண்ணம் இருந்தது. 

இது குறித்து தீபிகா படுகோன் கூறியதாவது  


இதையடுத்து சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வண்டிகள், 5 வாட்டர் டேங்கர் லாரிகள் விரைந்து தீயை கட்டுக்குள் வைக்க போராடியது. இந்த 34 மாடி கட்டடத்தின் ஏதோ ஒரு மாடியில் தான் தீபிகா படுகோன் இருக்கிறார். அவரது அலுவலகமும் இந்த கட்டடத்தில் தான் உள்ளது. இந்த தீ விபத்து நடந்த போது அவர் வீட்டில் இல்லை என்று தகவல் கூறப்பட்டு உள்ளது.

மும்பையில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் மூன்று பெரிய தீ விபத்துகள் நடந்துள்ளன. இந்த மாத ஆரம்பத்தில் தெற்கு மும்பையில் இருக்கும் வருமான வரித் துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த 9 ஆம் தேதி படேல் சாம்பர்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு தீயணைப்பு வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது.

.