Read in English
This Article is From Nov 22, 2018

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் பெங்களூர் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ..

தீபிகாவும் ரன்வீரும் இணைந்து விண்டேஜ் ஸ்டைல் ஓவியம் போன்று கொடுத்த போட்டோ போஸ் மக்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.

Advertisement
Entertainment Posted by

பெங்களூர் திருமண வரவேற்பில் தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும்.

New Delhi:

இத்தாலியில் திருமணம் முடித்து வந்த தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கின் திருமண வரவேற்பு பெங்களூரில் நடந்தது. நேற்று நடந்து திருமண வரவேற்பில் தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் அட்டகாசமான உடையுடன் அழகாக நின்று உறவினர்களையும் நண்பர்களையும் வரவேற்றனர். தீபிகா தங்க நிற சரிகை கொண்ட பட்டு புடவையை அணிந்திருந்தார். தீபிகாவின் உடைக்கு இணையாக அழகான பந்தகலா உடையில் அழகாக ரன்வீர் சிங் இருந்தார். ஆடை வடிவமைப்பாளர் ஸபயாஸி தீபிகாவின் உடையை வடிவமைத்தார். தீபிகா அணிந்துள்ள ஆடை தீபிகாவின் அம்மா உஜ்லா படுகோன் பரிசளித்தது.இந்த சேலை பெங்களூரில் இயங்கும் அங்கடி கேலரியாவில் வாங்கியது. ரன்வீர் சிங்கின் ஆடை டிசைனர் ரோஹித் பால் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 

தீபிகா தங்க நிற சரிகை சேலையில் பாரம்பரிய நகைகளுடன் தோற்றமளித்தார். பச்சை நிற கற்கள் பதித்த நகைககளை அணிந்திருந்தார். தலையலங்காரமாக பன் ஸ்டைலில் பூ வைத்து திருமணப் பெண்ணாக தோற்றமளித்தார்

 

 

சரியான வகையில் லைட்டிங் செய்ய  தாமதமான பொழுதும், தீபிகாவும் ரன்வீரும் பொறுமையாக நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். ரன்வீர் வணக்கம் சொல்லும் விதத்திலும் போஸ் கொடுத்தார்.

பெங்களூரு திருமண வரவேற்பில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர்சிங்

 

பெங்களூரு திருமண வரவேற்பில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர்சிங்

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது. குடும்பத்துடன் நின்று விருந்தினர்களை வரவேற்கும் காட்சி: 

 

 

Advertisement

தீபிகாவும் ரன்வீரும் இணைந்து விண்டேஜ் ஸ்டைல் ஓவியம் போன்று கொடுத்த போட்டோ போஸ் மக்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறது. 
 

 

 

பேட்மிட்டன் சாம்பியன் பிவி சிந்து திருமண வரவேற்புக்கு முதல் ஆளாக வருகை தந்திருந்தார். 

 

அனில் கும்ப்ளே தனது மனைவியுடன் வருகை தந்திருந்தார்.

Advertisement

இத்தாலியில் திருமணம் நடந்த பொழுது தீபீகா மற்றும் ரன்வீர் இருவரும் திருமணத்திற்கு வந்த  உறவினர்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. அதைப்போல் ரிசப்ஸன் நடக்கும் இடத்திலும் புகைப்படத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. நேற்று காலையில் பெங்களூரில் உள்ள லீலாவைச் சுற்றி பாதுகாப்புகள் கடுமையாக்கப்பட்டன.லீலாவில்தான் தீபிகாவிற்கு பிடித்த இத்தாலியன் உணவகம் அமைந்துள்ளது.

வரவேற்பு நடக்கும் இடத்தில் நேற்று காலையில் தீபிகாவும் படுகோனும் காரில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கிடைத்துள்ளது.

 

Advertisement

தீபிகா படுகோனும் மற்றும் ரன்வீர் சிங்கும் செவ்வாய் மாலை ஃப்ளைட்டில் பெங்களூரு வந்தடைந்தனர். அன்று மாலையே திருமணப் புகைப்படங்கள் பலவற்றை தீபிகா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இத்தாலியில் நவம்பர் 14 அன்று தென்னிந்தியா கொங்கனி முறையிலும் நவம்பர் 15 அன்று சிந்தி பாரம்பரிய முறையிலும் திருமணம் நடந்து முடிந்தது. மெஹந்தி நிகழ்வின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார் தீபிகா.
 

 

 

Advertisement

 

 

 

 

Advertisement

 

 

 

 

இத்தாலியில் திருமணம் முடிந்து நவம்பர் 18-ம் தேதி மும்பை ஏர்போர்ட்டிற்கு வந்தடைந்த போது.

 

 

 

 

சினிமா பிரபலங்களுக்காக பிரத்யேகமாக நவம்பர் 28-ம் தேதி ரிஸப்ஸன் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement