Katihar:
பீகார் மாநிலத்தில் ஐந்து முதல் பத்து வயது வரையுள்ள 5 குழந்தைகள் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்று மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
மணிஹரி தொகுதியின் நாராயணபூர் பஞ்சாயத்துக்குட்பட்ட போச்சாஹி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு சிறுமிகள் உட்பட குழந்தைகள் விளையாடும் போது நீருக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இறந்தவர்கள் அனைவரும் பழங்குடியினர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
Advertisement
கதிஹாரில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஐ எட்டியுள்ளது என்று மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் கொள்கையின் படி இறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார்.
Advertisement
COMMENTS
Advertisement