This Article is From Jul 07, 2018

7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..? - பிகாரில் கொடூரம்!

பிகார் மாநிலத்தில், 13 வயது சிறுமி, 7 மாதங்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • பிகாரின் சப்பார் மாவட்டதில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது
  • தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • பாதிக்கப்பட்ட சிறமியின் புகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது
Chhapra:

பிகார் மாநிலத்தில், 13 வயது சிறுமி, 7 மாதங்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிகார் மாநிலத்தின் சப்பார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்களால் கடந்த டிசம்பர் மாதம் முதல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருவதாக புகார் கொடுத்துள்ளார். மேலும், 15 பள்ளி மாணவர்களும் தன்னை பலாத்காரம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து சப்பார் மாவட்டத்தில் இருக்கும் பெண்கள் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியர், 1ஆசிரியர் மற்றும் 2 மாணவர்கள் கைது செய்து விசாரித்து வருகிறது போலீஸ். குற்றம் சாட்டப்பட்டுள்ளள மீதம் இருப்பவர்களையும் போலீஸ் தேடி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் சிறுமி முதல் முறையாக 1 சக மாணவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது. அந்நேரத்தில் சிறுமியின் தந்தை சிறையில் இருந்ததால், அந்த காரணத்தைச் சொல்லி மாணவன் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தொடர்ந்து மிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரில் தெரவித்துள்ளார் சிறுமி. தந்தை மீண்டும் சிறையில் இருந்து வந்த பின்னர் தான் சிறுமி போலீஸில் புகார் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.