யானை நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
Ranchi: ஜார்க்கண்ட்டில் மதம் பிடித்த யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து கிராமத்தை சூறையாடியது. வீடு ஒன்றை இடித்து தரைமட்டம் ஆக்கியதுடன் அங்கிருந்த பெண், பச்சிளம் குழந்தை உள்பட 4 பேரை மிதித்துக் கொன்றுள்ளது.
ராஞ்சி மாவட்டத்தில் உள்ள லாபங் என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட பெண் 35 வயதுடை சுஷ்மா என்பது தெரியவந்துள்ளது. அவரது பச்சிளம் குழந்தை பிராலும் யானையின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளார். இதேபோன்று 55 வயதுடைய தகாரி பகான், 60 வயது பிர்சா ஓரான் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து யானையை விரட்டி அடிக்க கிராம மக்கள் முயன்றனர். அப்போது பதில் தாக்குதலில் யானை ஈடுபட்டதில் சிலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நடடிவக்கை மேற்கொண்டனர்.
பின்னர் ஒருவழியாக யானை காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்டது.