বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 03, 2019

இந்தியா வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மாலத்தீவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார்!

மாலத்தீவின் முன்னாள் துணைத் அதிபர் அகமது அதீப் அப்துல் கபூர் மாலத்தீவில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோர திட்டமிட்டிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

மாலத்தீவின் முன்னாள் துணைத் அதிபர் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முயன்றார்.

New Delhi:

கடல்மார்க்கமாக தூத்துக்குடி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூர், கடலோர காவல்படையினர் துணையுடன் மீண்டும் மாலத்தீவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார். 

மாலத்தீவில் வீட்டுச் சிறையில் இருந்து வரும், முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூர், அங்கு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோர திட்டமிட்டிருந்தார்.

முறையான ஆவணங்கள் அடிப்படையில் வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவரிடம் எந்த முறையான ஆவணங்களும் இல்லை. இதனால், அவர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறும்போது, தமிழ்நாடு கடற்கரையில் கப்பலில் அகமது அதீப் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் நுழைந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, நடுக்கடலில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர், இந்தியாவில் கால் வைக்க அனுமதிக்கப்படவில்ல. இதை தொடர்ந்து தடுப்பு காவலில் அவரை பிடித்து வைத்திருந்த இந்திய கடற்படையினர் மற்றும் உளவுத்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

Advertisement

37 வயதான அவர் 2015-ம் ஆண்டு அந்நாட்டு அதிபரை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 33 ஆண்டுகள் தண்டனை பெற்றவர் ஆவார். மேல்முறையீடு செய்த அவருக்கு தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் மே தின விழாவில் துப்பாக்கியுடன் நுழைந்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கு பயந்து அகமது அதீப் அப்துல் கபூர் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

அகமது அதீப் ஏற்கனவே, சுற்றுலாத்துறை அமைச்சராகவும், பொருளாதாரக் குழுவின் தலைவராக இருந்துள்ளார். 
 

Advertisement