বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 19, 2019

அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு 7 நாட்கள் கெடு! 3 நாளில் பவர் கட்!!

டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் 2014-ல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. சுமார் 200 பேர் வீட்டை காலி செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் முன்னாள் எம்.பி.க்கள் பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

New Delhi:

அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் அங்கு அளிக்கப்பட்டு வரும் மின்சாரம், தண்ணீர் சப்ளை உள்ளிட்டவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாடாமன்ற உறுப்பினர்களுக்காக டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எம்.பி.க்களாக பொறுப்பில் இருக்கும் வரையில் இந்த பங்களாக்களில் தங்கிக் கொள்ளலாம். 

தற்போது 2014-ம் ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டு புதிய மக்களவை அமைந்து 3 மாதங்களை கடந்து விட்டன. இருப்பினும் சுமார் 200 எம்பிக்கள் தங்களது பங்களாவை காலி செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.  

மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் எம்.பி.க்கள் பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஏற்கனவை கடந்த 2014-ல் எம்.பி.க்களாக இருந்த சிலர் தற்போதும் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று புதியதாக நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 200-யை தாண்டியுள்ளது. 

பழையவர்கள் பங்களாக்களை காலி செய்யாததால், புதிய எம்பிக்களுக்கு அவற்றை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறத. இதற்காக வெஸ்டர்ன் கோர்ட் பகுதியில் தற்காலிக தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் அங்கு அளிக்கப்பட்டு வரும் மின்சாரம், தண்ணீர் சப்ளை உள்ளிட்டவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்த தகவலை எம்.பி.க்களுக்கு வீடு வசதி அளித்து தரும் கமிட்டியின் தலைவர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Advertisement