Read in English
This Article is From Jul 27, 2018

ஆன்டிகுவாவின் குடிமகன் ஆன நிரவ் மோடியின் உறவினர்… ஏன் என்று விளக்கம்!

நிரவ் மோடியின் உறவினரான தொழிலதிபர் மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டின் குடிமகன் ஆக மாறியுள்ளார்

Advertisement
இந்தியா
New Delhi:

நிரவ் மோடியின் உறவினரான தொழிலதிபர் மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டின் குடிமகனாக மாறியுள்ளார். அந்த நாட்டில் குடிமகன் ஆக விண்ணப்பித்ததற்குக் காரணமாக அவர் கூறுவது, ‘கரீபியன் தீவுகளில் எனது தொழிலை விரிவுபடுத்தவே, ஆன்டிகுவாவின் குடிமகன் ஆக விண்ணப்பித்துள்ளேன்’ என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் தேசிய வங்கியிடமிருந்து 13,400 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தார் சிலரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தேடி வருகிறது. நிரவ் மோடியுடன் தேடப்பட்டு வரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் சோக்சியும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு முதல் பிஎன்பி வங்கியிடமிருந்து நிரவ் மோடி குடும்பம் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. அவர்கள் மோசடியில் ஈடுபட்ட விஷயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் தெரியவந்தது. அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் கொடுத்தது பிஎன்பி. ஆனால், அவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு முன்னரே குடும்பத்தோடு இந்தியாவிலிருந்து தப்பியோடி விட்டானர். அதன் பிறகு நிரவ் மோடி மற்றும் சோக்சி உள்ளிட்டவர்களின் பாஸ்போர்டுகளையும் இந்திய அரசு முடக்கவிட்டது.

இந்நிலையில் சோக்சி, கரீபியன் தீவுகளில் இருக்கும் ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது ஆன்டிகுவா அரசு, இந்திய அரசிடம் சோக்சி குறித்து விசாரித்துள்ளது. அந்நேரத்தில் சோக்சி மீது எந்த வழக்கும் இல்லாததால், நவம்பர் மாதம் அவருக்கு ஆன்டிகுவா குடியுரிமை வழங்கப்பட்டது. பின்னர், ஜனவரி 15 ஆம் தேதி அவர் ஆன்டிகுவாவின் குடிமகனாக ஆனார். ஜனவரி 29 ஆம் தேதி தான் பிஎன்பி-யில் செய்த பணமோசடி குறித்து தெரியவந்தது. மேலும், ஜனவரி மாதம் இந்தியாவிலிருந்து புறப்பட்ட சோக்சி, தான் அமெரிக்காவுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள செல்கிறேன் என்று கூறினார். இதனால், அவரை இந்திய அரசு, கைது செய்து அழைத்து வர முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஆன்டிகுவாவில் ஏன் குடியுரிமை வாங்கினேன் என்பதற்கு தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்ட சோக்சி, ‘எனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் தான் ஆன்டிகுவாவில் நான் குடியுரிமை பெற்றுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுக்குத் திரும்ப வருவது குறித்து சோக்சி, ‘இந்தியாவுக்கு நான் திரும்ப வரமாட்டேன். என் உயிருக்கு அங்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ என்றுள்ளார். 

Advertisement