हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 23, 2019

பொருளாதார மந்தநிலை தொடர்பாக மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் - அரவிந்த் கெஜ்ரிவால்

பொருளாதாரத்தை சரிசெய்ய மையம் எந்த நடவடிக்க எடுத்தாலும் டெல்லி அரசு அவர்களுக்கு முழு ஆதரவையும் அளிக்கும்.

Advertisement
இந்தியா Translated By

நாடு ஒன்றாக நின்று பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை இது என்று கெஜ்ரிவால் கூறினார்.

New Delhi:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பொருளாதார மந்த நிலையை சமாளிக்க உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும் அரசு மீது முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார். 

நாடு ஒன்றாக நின்று பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை இது என்று கெஜ்ரிவால் கூறினார்.

“பொருளாதாரத்தை சரிசெய்ய மையம் எந்த நடவடிக்க எடுத்தாலும் டெல்லி அரசு அவர்களுக்கு முழு ஆதரவையும் அளிக்கும். வேலைவாய்ப்பு இழப்பு குறித்து தனிப்பட்ட முறையில் கவலைப்படுகிறேன். 

இது வாகனத்துறை, ஜவுளி, ரியல் எஸ்டேட் மற்றும் பிறருக்கு மிகுந்த கவலையாக உள்ளது. அந்த துறைகளில் மந்த நிலை வெகுவாக பரவுவதை காண்கிறோம்” என்று அவர் கூறினார்.

Advertisement
Advertisement