This Article is From Dec 02, 2018

2022 ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டை நடத்துகிறது இந்தியா: பிரதமர் மோடி

இந்தியா தனது 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை 2022-ம் ஆண்டில் கொண்டாட உள்ள நிலையில், இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

2022-ல், 75-ம் ஆண்டு சுதந்திர தினத்துடன் இணைந்து ஜி-20 உச்சி மாநாட்டையும் இந்தியா நடத்துகிறது.

Buenos Aires:

இந்தியா தனது 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், 2022-ல் ஜி-20 உச்சி மாநாட்டையும் இந்தியா நடத்துகிறது, என அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு இந்த மாநாடு நடைபெற இருந்ததாகவும், தமது கோரிக்கையை ஏற்று 2022-ல் நடத்த அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், 2022ல் இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை அடைந்திருக்கும். அந்த சிறப்பு ஆண்டில் ஜி -20 உச்சிமாநாட்டில் உலகத்தை வரவேற்பதற்கு இந்தியா காத்திருக்கிறது.

பொருளாதார ரீதியாக இந்தியா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் பழமையான வரலாறு, பன்முகத்தன்மை, இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை அனுபவிக்க வருமாறும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

1999-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு, இதில் தொழில் வளம் மிக்க 19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் இணைந்தன, ஆண்டுதோறும் இதன் உச்சி மாநாடு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு அர்கென்டினாவின் பிருனஸ் அயர்ஸ் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோட் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின் பிங் உட்பட ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

.