This Article is From Nov 16, 2018

திண்டுக்கல்லில் ‘கஜா’ புயல் மையம்… 3 மாவட்டங்களில் கனமழை!

புயல் எதிரொலியை அடுத்த தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது

Advertisement
தெற்கு Posted by

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்துள்ளது. தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது.

மேலும் படிக்க - "தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை"

புயல் எதிரொலியை அடுத்த தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Advertisement

கஜா புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், ‘காலை 6 மணிக்கு கஜா புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிரப்பிட்டி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் படிக்க - "ஆயிரக்கணக்கான மரங்களை சாய்த்த கஜா - மின்சேவை துண்டிப்பு"

Advertisement

மேலும், திருச்சி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ள கஜா புயல் 23 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் புயல், ஆழ்ந்த காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்' என்று தெரிவித்துள்ளது.

Advertisement