This Article is From Nov 20, 2018

நாகை, புதுக்கோட்டை திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயல் பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

நாகை, புதுக்கோட்டை திருவாரூர்  மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயல் பாதிப்பு காரணமாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கில் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்திருப்பதால் அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையே பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவை வரும் 26-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் புயல் பாதிப்பு குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்துள்ளார்.

நாளை புயல் பாதிப்பு பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

.