விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறப்பைக் கொண்டாடும் இந்து மதப் பண்டிகை. விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வீடுகளில் களிமண்ணால் செய்த சிலைகள் செய்து வணங்குவது வழக்கம்.
அன்றைய நாளில் இறை நம்பிக்கை உள்ளவர்கள் விரதம் இருந்து பிரார்த்தனை செய்கிறார்கள். விநாயருக்கு பிடித்தமான உணவாக கொலுக்கட்டை ஆகியவற்றை படைத்து வணங்குவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி தொடங்கிய 10 நாள் கழித்து சிலையை கடலில் கரைப்பது வழக்கம் மும்பையில் மட்டும் 1,50,000 சிலைகள் ஆண்டுதோறும் கரைக்கப்படுவது வழக்கம்.
விநாயக் கடவுள் புதிய தொடக்கங்களின் கடவுள் என்றும் தடைகளை நீக்குபவர் என்றும் ஞானத்தை வழங்குபவராகவும் கருத்தப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடாக, கோவா, தெலுங்கானா, குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி தேதி: செப்டம்பர் 2, 2019 திங்கள்
விநாயகர் விசர்ஜன் தேதி : செப்டம்பர் 12, 2019, வியாழக்கிழமை
பூஜைக்கு ஏற்ற நேரம் : காலை 11.05 மணி முதல் 1:36 மணி வரை
காலம் - 2 மணி 31 நிமிடங்கள்
விநாயகர் விசர்ஜன் : செப்டம்பர் 12, 2019, வியாழக்கிழமை
சந்திரன் பார்ப்பதை தவிர்க்க வேண்டிய நேரம் - காலை 8:55 மணிமுதல் மாலை 9.05 மணிவரை
காலம் -12 மணி 10 நிமிடங்கள்
சதுர்த்தி திதி தொடங்கும் நேரம் - செப்டம்பர் 2, 2019 அதிகாலை 4:57
சதுர்த்தி திதி முடியும் நேரம்: அதிகாலை 1:54 செப்டம்பர் 3, 2019
பூஜை செய்யும் முறை
விநாயகர் சதுர்த்தி மத்திய நேரம் விரும்பப்படுகிறது. ஏனெனில் விநாயகர் மத்தியான காலாவின் போது பிறந்ததாக நம்பப்படுகிறது. புராண மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யப்படுகிறது.
பூஜையை தொடங்குவதற்கு முன் சங்கல்பா செய்யப்படுகின்றன. 16 விதமான தோஷ உபச்சார பூஜை செய்யப்படுகிறது. மந்திரம் ஓதுவது, விநாயகர் சிலையை அலங்கரிப்பது பிரசாதம் படைப்பது ஆகியவை இதில் அடங்கும்.