Kochi/Thrissur:
கேரளாவில் இன்று அதிகாலை இரண்டு ஏடிஎம்களிலிருந்து கொள்ளையர்கள் ரூ. 35லட்சத்தை திருடிவிட்டதாக போலீசார் கூறினர்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், இரும்பணம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதல் திருட்டு நடந்துள்ளது. இது ஒரே கும்பலின் கை வரிசையாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஏடிஎம்-ஐ உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்தி ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். இரண்டாவது கொள்ளை சம்பவம், திரிச்சூர் மாவட்டம் கொரட்டியில் உள்ள தனியார் வங்கியில் அதே முறையை பயன்படுத்தி திருடியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை பார்த்த போலீசார் கொள்ளை கும்பலில் ஒருவர் ஏடிஎம்-ல் உள்ள கேமிராவில் ஸ்ப்ரேயை அடித்தது தெரியவந்துள்ளது.
Advertisement
COMMENTS
Advertisement