This Article is From Dec 15, 2018

‘2019 உலக கோப்பை நமக்குத்தான்..!’- அடித்துச் சொல்லும் கங்குலி

அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது

Advertisement
Sports Posted by

அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் வெற்றி வாகைச் சூட அதிக வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சவுரவ் கங்குலி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள கங்குலி, ‘உலகக் கோப்பைப் போன்ற தொடர்களில் நான் விளையாடியது மிகப் பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பைப் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது' என்று கூறினார்.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு, மே மாதம் 30 முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை உலக கோப்பைத் தொடர் நடக்கும். பல நாட்டு அணிகள் ஃபுல் ஃபார்மில் இருப்பதால், இந்தத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் இன்னாள் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி, இந்தத் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement