This Article is From May 17, 2019

இன்று முதல் 19ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடல்!

தமிழகத்தில் மே.19 தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை முதல் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதியில் மட்டும் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால், அங்கு தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கும், 38 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்.18ஆம் தேதி நடைபெற்றது.

எனினும், வேலூர் மக்களவைத் தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனையடுத்து, மீதமுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற மே.19ஆம் தேதி இடத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதோடு, நாடாளுமன்ற தேர்தலின் போது, சர்ச்சைக்குள்ளான 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

Advertisement

இந்நிலையில், பிரச்சாரம் முடிவடைந்ததும் 4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள், மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மேலும், 4 தொகுதிகளில் உள்ள மதுகடைகளை இன்று மாலை முதல் வாக்குப்பதிவு நேரம் முடியும் வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுவாக்குப் பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement