Read in English
This Article is From Jun 20, 2019

கொல்கத்தாவில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ராணுவ வீரர் -கைது

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் இராணுவத்தின் டி குழு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

சிறுமி ராணுவ வீரரின் மகள் ஆவார். (Representational)

Kolkata:


கொல்கத்தாவில் உள்ள ராணுவத்தின் தலைமையகமான வில்லியம் கோட்டைக்குள் பெண் குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்  (போக்ஸோ) சட்டத்தின் கீழ் இராணுவத்தின் டி குழு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளது. இந்த பெண் குழந்தை மற்றொரு ராணுவ ஊழியரின் மகள். வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர் தப்பியோடிய நிலையில் செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். 

Advertisement