हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 16, 2019

பணி நிமித்தமாக டெல்லி சென்ற டிஜிபி மாரடைப்பால் மரணம்!!

பணி நிமித்தமாக தலைநகர் டெல்லி சென்ற டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் இன்று காலை காலமானார்

Advertisement
இந்தியா Edited by

இந்த ஆண்டு மார்ச் மாதம் கோவா காவல் கண்காணிப்பாளாராக பொறுப்பேற்றார் பிரணாப் நந்தா.

Panaji :

கோவா காவல் கண்காணிப்பாளர் பிரணாப் நந்தா இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். 

பிரணாப் நந்தா, 1988-ஆம் ஆண்டு பிரிவு போலீஸ் அதிகாரி ஆவார். அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களிலும் பணியாற்றியவர், இந்த ஆண்டு மார்ச் மாதம் கோவா காவல் கண்காணிப்பாளாராக பொறுப்பேற்றார்.

இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் ஜேஸ்பல் சிங் கூறும்போது, பணி நிமித்தமாக தலைநகர் டெல்லி சென்ற டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் இன்று காலை காலமானார். அந்த தகவல் பெரும் அதிர்ச்சியை தருகிறது என்று கூறினார். 

உபிரணாப் நந்தாவின் மனைவி சுந்தரி நந்தா புதுச்சேரியின் முதல் பெண் டிஜிபியாக 2018-ல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement