கோவாவில் கிறிஸ்மஸினை கொண்டாடும் போக்குவரத்து காவல்துறை சாலை விதிகளை மீறுபவர்களை கையாள தனித்துவமான வழியயைக் கண்டுபிடித்துள்ளனர்.
சாண்டா கிளாஸ் உடையணிந்து போக்குவரத்து காவல்துறையினர் வாகனஓட்டிகளுக்கு சாக்லேட்டுகள் கொடுத்து சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
“சாலை விதிகளை மீறுபவர்களை பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு கற்பித்தோம். சாலை விதிகளை சிறப்பான முறையில் பரப்ப இந்த முயற்சியை பயன்படுத்தினோம்” என்று போக்குவரத்து காவல்துறையின் இன்ஸ்பெக்டர் பிராண்டன் டிசோசா கூறினார்.
விதிகளை பல இருசக்கர வாகன ஓட்டிகள் ஐ.எஸ்.ஐ முத்திரையிட்டாத ஹெல்மெட்டினை பயன்படுத்துகிறார்கள். மேலும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருப்பதை கண்டறிந்தோம்.
தனித்துவமான முறையில் வாகனஓட்டிகளுக்கு தெரிவித்துள்ளனர் என்று வாகன ஓட்டிகளில் ஒருவரான சாண்ட்ரா அல்வாரெஸ் கூறினார்.
விழாக்காலங்களில் மக்கள் பிஸியாக இருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் தங்கள் கடமை செய்வதில் மும்முரமாக இருக்கின்றனர் என்று கூறினர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)