Kolkata:
மேற்கு வங்கத்தில் 32 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியா - வங்கதேச எல்லையில் தங்கம் கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அப்துல் ஹய் மோந்தல் என்பவரிடம் இருந்து ரூ. 32 லட்சம் மதிப்புள்ள 10 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மோந்தலை கைது செய்த பாதுகாப்பு படையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2018-ல் மட்டும் ரூ. 8.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 12 பேர் கைதாகியுள்ளனர்.
Advertisement
COMMENTS
Advertisement