This Article is From Oct 21, 2019

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்! சுங்கத்துறை நடவடிக்கை!!

சுங்கத்துறை சட்டம் 1962-ன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற 5 ஆயிரத்து 600 சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்! சுங்கத்துறை நடவடிக்கை!!

7 பயணிகளை சோதனை செய்ததில் அவர்கள் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

Chennai:

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளும், 10 ஆயிரம் அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இலங்கை மற்றும் துபாயில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

இதில் 7 பயணிகளை சோதனை செய்ததில் அவர்கள் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான 2.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதேபோன்று இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம் அளவுள்ள 10 ஆயிரம் அமெரிக்க டாலரும் இலங்கை பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சுங்கத்துறை சட்டம் 1962-ன்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற 5 ஆயிரத்து 600 சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 

.