This Article is From Oct 12, 2019

சென்னை விமான நிலையத்தில் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சுங்க அதிகாரிகள் இலங்கையிலிருந்து வந்த ஆண் மற்றும் பெண்ணொருவரிடமிருந்து ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மொத்தமாக ரூ. 37 லட்சம் மதிப்புள்ள 973 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Chennai:

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இலங்கையிலிருந்து வந்த ஆண் மற்றும் பெண்ணொருவரிடமிருந்து ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிவகுமார் பழனியாண்டி (42) மற்றும் சாகே மேரி (35)

“சிவக்குமாரின் உடலை தொட்டு சோதனைசெய்த போது 94 சதவீத தூய்மையான 525 கிராம் எடையுள்ள ரூ.19.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சாகே மேரியிடம் 128 கிராம் எடையுள்ள 4.7 லட்சம் எடையுள்ள தங்கமும் 320 கிராம் எடையுள்ள  ரூ.126 லட்சம் மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டன”

மொத்தமாக ரூ.  37 லட்சம் மதிப்புள்ள 973 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.