Read in English
This Article is From Apr 08, 2020

அடுத்த ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு? அமைச்சர்களின் பரிந்துரை என்ன?

மாநிலங்களின் முன்மொழிவுகளை பரிசீலிப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திங்களன்று தேசத்தின் நலனை கருதி சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Advertisement
இந்தியா Edited by

அனைத்து கல்வி நிலையங்களிலும் அடுத்த 4 வாரங்களுக்கு விடுமுறை நீட்டிக்க வேண்டும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Highlights

  • அடுத்த ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு?
  • அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் தடை உத்தரவை நீட்டிக்க பரிந்துரை
  • பல்வேறு மாநிலங்களும், ஊரடங்கை நீட்டிப்பதற்கே பரிந்துரைக்கின்றன
New Delhi:

அனைத்து கல்வி நிலையங்களிலும் அடுத்த 4 வாரங்களுக்கு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்றும், இன்னும் சில நாட்களுக்கு அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இவை ஏப்.14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் என்பதற்கான அறிகுறிகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, பிரதமர் நரேந்திர மோடி ஏப்.14ம் தேதி வரை நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். எனினும், கொரோனா வைரஸ் பரவல் கணிசமான அளவில் உயர்ந்தே வருகிறது. இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களும், ஊரடங்கை நீட்டிப்பதற்கே பரிந்தரைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால், மாநிலங்களின் முன்மொழிவுகளை பரிசீலிப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தேசத்தின் நலனை கருதி சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

கடந்த மார்ச்.25ம் தேதி முதல் தற்போது வரை 4வது முறையாக கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதோ, இல்லையோ அனைத்து கல்வி நிலையங்களிலும் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என அமைச்சர்கள் பரித்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், மத வழிபாட்டு தளங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அங்கு டிரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

Advertisement

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நேற்றைய தினம் நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதேபோல், ஏப்.14ம் தேதிக்கு பின்னர் மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களுடன், வணிக வளாகங்களை திறப்பதற்கும் அடுத்த நான்கு வாரத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 508 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,789ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 124 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
Advertisement