বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 15, 2019

கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விபரீதம்! - விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு!

வதோதராவில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பர்திகுயி கிராமத்தில் உள்ள தர்ஷன் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

உணவகத்தை சேர்ந்த 3 பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

Mumbai:

குஜராத் மாநிலத்தின் வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி 4 துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

வதோதராவில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பர்திகுயி கிராமத்தில் உள்ள தர்ஷன் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹோட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளிகள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களுடன் உணவக ஊழியர்கள், அஜெய் வாசாவா (24), விஜய் செளகான் (22), சகாதேவ் வாசாவா (22) ஆகிய 3 பேரும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 4 துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதுதொடர்பாக, தாபாகி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷவாயு தாக்கி, துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

Advertisement