Srinagar:
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு அருகே தங்கிவாசா பகுதியில் பசல்போரா என்ற கிராமம் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் சுடத் தொடங்கினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த என்கவுண்டரை, ராஷ்டிரிய ரைபிள்ஸ், போலீஸ் சிறப்பு ஆபரேஷன் குழு மற்றும் ரிசர்வ் போலீஸ் படையினர் ஆகியோர் கூட்டாக நடத்தினர்.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
Advertisement
COMMENTS
Advertisement