This Article is From May 26, 2020

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம்

மேலும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம்

Highlights

  • 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்
  • குறைந்தபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் பதிவாகும்
  • காலை 11.30 முதல் மாலை 3.30 வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்கவும்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனத்தால் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. 

இதுதொடர்பாக இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த 9 மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியசையும் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் பதிவாகும். 

இதன் காரணமாக அனல் காற்று வீசக்கூடும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

மேலும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியநாயக்கன் பாளையத்தில் 3 செ.மீ மழையும், கமுதியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸூம் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸூம் பதிவாகும் என தெரிவித்துள்ளது. 
 

Advertisement
Advertisement